Published : 03 Apr 2020 12:32 PM
Last Updated : 03 Apr 2020 12:32 PM

கரோனா தொற்று: பிரான்ஸில் பலி எண்ணிக்கை 4,500 ஆக அதிகரிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 471 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 4,500 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிரான்ஸில் வியாழக்கிழமையன்று கரோனா வைரஸ் தொற்றுக்கு 471 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 4,500 ஆக அதிகரித்துள்ளது. எனினும், பிரான்ஸில் கரோனா தொற்றுக்கான இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

பிரான்ஸில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,000க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்” என்றார்.

இந்த நிலையில் பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் மட்டும் கரோனா பாதிப்புக்கு இதுவரை 884 பேர் பலியானதாகவும் இந்த எண்ணிக்கையையும் எடுத்துக்கொண்டால் பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 5,387 பேர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 59,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x