Published : 01 Apr 2020 04:42 PM
Last Updated : 01 Apr 2020 04:42 PM

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பலி 9,000 ஆக அதிகரிப்பு: ஒரு லட்சம் பேர் பாதிப்பு

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 864 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 864 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு ஸ்பெயினில் பலியானவர்களின் என்ணிக்கை 9,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஸ்பெயினில் 1,02,136 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,000 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் குறைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் தலைநகரான மேரிட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 30,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் கரோனா வைரஸுக்கு அதிகப்படியான உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x