Published : 01 Apr 2020 01:21 PM
Last Updated : 01 Apr 2020 01:21 PM

கரோனா தொற்று: இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 837 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 837 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தேசிய சிவில் பாதுகாப்பு கூறும்போது, “இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 837 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,107 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தாலியில் 77,635 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,000 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இத்தாலியில் பிப்ரவரி 21 ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பள்ளிக்கூடம் முதல் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு இத்தாலியில் மேலும் நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x