Published : 01 Apr 2020 12:18 PM
Last Updated : 01 Apr 2020 12:18 PM

கரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹோப்கின்ஸ் கூறும்போது, “ உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 42,322 பேர் பலியாகினர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று சுமார் 190க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவைப் பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன.

மேலும், மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கரோன வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கரோனா தொற்று அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோனா வைரஸுக்கு அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x