Published : 31 Mar 2020 12:41 PM
Last Updated : 31 Mar 2020 12:41 PM

அடுத்த 30 நாட்கள் மிக முக்கியமானது: ட்ரம்ப்

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அடுத்த 30 நாட்கள் மிக முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,64,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளில் ட்ரம்ப் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது, “அடுத்த 30 நாட்களுக்குச் சவாலான நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் 30 நாட்கள் மிக முக்கியமானது. ஏனென்றால் நாம் மீண்டு வர வேண்டும். நாம் எவ்வளவு அர்ப்பணிக்கிறமோ அந்த அளவு விரைவாக இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிப்படுவோம். அந்த நேரத்திற்காகத்தான் நாம் காத்திருக்கிறோம்” என்றார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும் ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x