Last Updated : 30 Mar, 2020 08:55 AM

 

Published : 30 Mar 2020 08:55 AM
Last Updated : 30 Mar 2020 08:55 AM

கரோனா வைரஸ்: சீனாவில் மேலும் 4 பேர் பலி: 31 பேருக்கு கரோனா புதிதாகத் தொற்றியது

பெய்ஜிங்

கரோனா வைரஸிலிருந்து மெல்ல மீண்டு வந்துள்ள சீனா இன்னமும் கூட முழுதும் மீள முடியவில்லை. மேலும் 4 பேர் மரணமடைந்துள்ளனர், புதிதாக் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் 30 பேர் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கொரோனா தொற்று 723 ஆக அதிகரித்துள்ளது. கன்சு மாகாணத்தில் உள்நாட்டு கரோனா தொற்று ஒருவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

வைரஸின் முந்தைய மையமான ஹூபேயில் 4 பேர் மேலும் மரணமடைந்துள்ளனர்.

சீனாவில் உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 81,740 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 3,304 ஆகவும் உள்ளது. 75,770 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்லனர்.

168 பேருக்கு கரோனா தொற்று பரவியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது ,இதில் 165 பேர் அயல்நாட்டிலிருந்து திரும்பியவர்கள்

ஹாங்காங்கில் 641 உறுதி செய்யப்பட்ட கரோனா கேஸ்கள் உள்ளன, 38 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா முந்தைய மையமான ஹூபேய்க்கு விமானங்களை சீனா நேற்று முதல் இயக்கத் தொடங்கியது, ஆனால் வூஹானுக்கு விமானப் போக்குவரத்து இல்லை.

வூஹானில் ஏப்.8 முதல் விமானப்போக்குவரத்துத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கரோனா பாதிப்புக்கு 7 லட்சம் பேர்களும் பலியானோர் எண்ணிக்கை 33,000த்தையும் கடந்து சென்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x