Published : 29 Mar 2020 05:31 PM
Last Updated : 29 Mar 2020 05:31 PM

இலங்கையில் கரோனா வைரஸுக்கு முதல் பலி

இலங்கையில் கரோனா வைரஸுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் சுகாதாரத் துறை சேவை அமைப்பின் இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து இலங்கையின் சுகாதாரத் துறை சேவை அமைப்பின் இயக்குனர் அனில் ஜெயசிங்கே கூறும்போது, ''இலங்கையில் கோவிட்- 19 காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்த 65 வயதான நபர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். மரணமடைந்த நபருக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று சுமார் 115 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.

கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x