Published : 29 Mar 2020 04:37 PM
Last Updated : 29 Mar 2020 04:37 PM

பிரான்ஸில் 37,575 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு

பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37,575 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரெஞ்சு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 37,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 339 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,314 பேர்” என்றார்.

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், கரோனா வைரஸ் காரணமாக இனி வரும் நாட்களில் பிரான்ஸ் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த கோவிட்-19 காய்ச்சல் அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, , ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x