Published : 29 Mar 2020 03:50 PM
Last Updated : 29 Mar 2020 03:50 PM

மலேசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு

மலேசியாவில் கரோனா வைரஸுக்கு புதிதாக 150 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலேசியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மலேசியாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல்
புதிதாக 150 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 388 பேர் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x