Published : 29 Mar 2020 11:58 AM
Last Updated : 29 Mar 2020 11:58 AM

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 1,500 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார மையம் தரப்பில், “பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 29 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் அறியப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 469 பேரும், பஞ்சாப் மாகணத்தில் 557 பேரும் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர்.

கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x