Published : 29 Mar 2020 10:34 AM
Last Updated : 29 Mar 2020 10:34 AM

இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிப்பு: 51 மருத்துவர்கள் பலி

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி அரசுத் தரப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியில் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியில் இதுவரை கோவிட்-19 காய்ச்சல் காரணமாக 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருப்பதால், அங்கு ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் 19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x