Published : 27 Mar 2020 07:28 PM
Last Updated : 27 Mar 2020 07:28 PM

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பலி: 5 ஆயிரத்தை நெருங்குகிறது

ஸ்பெயினில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,000- ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 493 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,858 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 64,059 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 9,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் தலைநகரான மேட்ரிட்டில் மட்டும் 19,200 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கோவிட் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக ஸ்பெயின் அறியப்படுகிறது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x