Published : 24 Aug 2015 08:26 AM
Last Updated : 24 Aug 2015 08:26 AM

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5 ஆக பதிவானது.

கடந்த ஏப்ரல் 25-ம் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியான கோதரியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5 ஆகப் பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x