Published : 27 Mar 2020 01:05 PM
Last Updated : 27 Mar 2020 01:05 PM

கரோனா பாதிப்பு: இத்தாலியில் பலி எண்ணிக்கை 8,000 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சிவில் அமைப்பு கூறும்போது, “இத்தாலியில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிகை 8,000 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 80, 539 பேர் பாதிக்கப்பட்டுளனர். இதில் 33,648 பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3,612 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24,753 பேர் சாதாரண வார்டுகளில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் சிவில் அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ போரெல்லிக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் ஐரோப்பிய நாடான இத்தாலி பெரும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இத்தகைய மோசமான இறப்பு விகித்தத்துக்கு அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் 19 காய்ச்சலுக்கு சுமார் 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,090 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x