Published : 26 Mar 2020 07:36 PM
Last Updated : 26 Mar 2020 07:36 PM

ஐரோப்பாவில் இரண்டரை லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிப்பு

ஐரோப்பாவில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகமான சிஎன்என் வெளியிட்ட செய்தியில், “ஐரோப்பாவில் சுமார் 2,50,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. இத்தாலியில் மட்டும் கோவிட்-19 காய்ச்சலுக்கு 7,000 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்து அதிகமான பாதிப்பு ஸ்பெயினுக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 4 ஆயிரத்துக்கும்
அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 56,188 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்படுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x