Published : 26 Mar 2020 01:52 PM
Last Updated : 26 Mar 2020 01:52 PM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கோவிட்-19 பாதிப்புக்கு இதுவரை 1,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 8 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோவிட் -19 காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் சுமார் 400க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1000 பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அவர்கள் அனைவரும் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செயலாளர் சாபர் மிர்சா கூறும்போது, “பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 24% பேர் இளைஞர்கள். ஆனால், பிற நாடுகளில் வயதானவர்களே கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது முரணாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x