Published : 24 Mar 2020 07:15 PM
Last Updated : 24 Mar 2020 07:15 PM

கரோனா வைரஸ்: ஸ்பெயினில் மோசமாகும் நிலைமை; 24 மணிநேரத்தில் 514 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஸ்பெயின் அதிகாரிகள் தரப்பில், ''ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு 514 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினில் கோவிட் காய்ச்சலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2,696 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 40,000 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலிக்கு அடுத்து கோவிட் காய்ச்சலால் மோசமான நிலையை ஸ்பெயின் எதிர்கொண்டுள்ளது. தொற்று நோய் பரவும் நிலையில் பலி எண்ணிக்கையும் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்ரிட், கேட்டலோனியா போன்ற மாகாணங்களிலும் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா தொற்றுக்கு ஸ்பெயினில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x