Published : 24 Mar 2020 04:26 PM
Last Updated : 24 Mar 2020 04:26 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்

கரோனா வைரஸைத் தடுப்பதற்காக நேபாளம், இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பல நாடுகள் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட் காய்ச்சலைத் தடுப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி தர்மராஜ் கூறும்போது, ''இன்றுடன் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இது தொடர்பான நோட்டீஸ் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா, சீனா நாடுகளுடனான எல்லைப் புறங்களை நேபாளம் மூடியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x