Published : 24 Mar 2020 11:03 AM
Last Updated : 24 Mar 2020 11:03 AM

கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 3,34,981 பேர் பாதிப்பு; 14,652 பேர் பலி: உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 14,652 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பெரும் பாதிப்பை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கோவிட் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில், “ உலகம் முழுவதும் 190 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14,652 . சுமார் 3,34,981 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் தொற்று சற்று தணிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்ட சீன மருத்துவர்கள் பலர் மற்ற நாடுகளில் உள்ள மருத்துவர்களுக்கு நேரடியாக உதவியளித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x