Published : 22 Mar 2020 04:13 PM
Last Updated : 22 Mar 2020 04:13 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பும் 2,000 பேர்

கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் சூழலில், ஈரானிலிருந்து சுமார் 2,000 பேர் பாகிஸ்தானுக்குத் திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து பலுசிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, “ ஈரானிலிருந்து சுமார் 2,000 பேர் வரும் நாட்களில் தஃப்தான் எல்லை வழியாக தங்கள் நாட்டுக்குத் திரும்ப உள்ளனர். ஏற்கெனவே தஃப்தான் எல்லையில் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலுசிஸ்தானில் மட்டும் சுமார் 105 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்- 19 காய்ச்சலால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஈரானும் ஒன்று, சுமார் 20,610 பேர் ஈரானில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்

பாகிஸ்தானில் கோவிட் காய்ச்சலுக்கு 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

கோவிட்-19 காய்ச்சல் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 3,08,231 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x