Published : 20 Mar 2020 01:18 PM
Last Updated : 20 Mar 2020 01:18 PM

கரோனா வைரஸ் பாதிப்பு; ஒற்றுமையுடன் மீண்டு வருவோம்: ஈரான் அதிபர் பேச்சு

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பை ஒற்றுமையுடன் எதிர் கொண்டு வெல்வோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கோவிட் 19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,284 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 18,407 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

கோவிட் - 19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பைச் சந்தித்த நிலையில், அந்நாட்டு மக்களிடையே அதிபர் ஹசன் ரவ்ஹானி இன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மீண்டு வருவோம். சிரமங்களைத் தாண்டி இலக்குகளை அடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x