Published : 19 Mar 2020 05:35 PM
Last Updated : 19 Mar 2020 05:35 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு புதிதாக 149 பேர் பலி

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 149 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் காய்ச்சலுக்கு 149 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,284 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் காய்ச்சலிருந்து விடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 2 லட்சம் பேர் கோவிட் - 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9,000 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x