Published : 19 Mar 2020 03:57 PM
Last Updated : 19 Mar 2020 03:57 PM

சவுதி அரேபியாவில் புதிதாக 67 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

சவுதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சவுதியில் புதிதாக 67 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகாரித்துள்ளது. 6 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கையில் சவுதி அரசு இறங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதாரத் துறைகளைத் தவிர்த்து பிற நிறுவனங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x