Published : 19 Mar 2020 10:42 AM
Last Updated : 19 Mar 2020 10:42 AM

பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு 2 பேர் பலி; 300 பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இருவர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பாகிஸ்தானில் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் சாபர் மிர்சா கூறும்போது, “ மிகுந்த வருத்தத்துடன் பாகிஸ்தானில் கோவிட் 19 காய்ச்சலுக்கு இதுவரை இருவர் பலியாகி உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதில் ஒருவர் உம்ராவிலிருந்து வந்தவர். மற்றொருவர் ஹங்குவை சேர்ந்தவர். அவர்களின் குடும்பத்திற்கு எங்களது
ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்” என்று வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு ஆன்மிக யாத்திரை சென்றவர்கள் மூலமாகத்தான் அந்நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய தகவலின் படி சுமார் 2 லட்சம் பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8,000 பேர் வரை பலியாகி உள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x