Published : 18 Mar 2020 07:51 PM
Last Updated : 18 Mar 2020 07:51 PM
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கோவிட் காய்ச்சலுக்கு சுமார் 8,000 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் அதிகபட்சமாக 147 பேர் கோவிட் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் வைரஸ் பரவிய நகரான வூஹானில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கோவிட் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT