Published : 17 Mar 2020 03:43 PM
Last Updated : 17 Mar 2020 03:43 PM

தென்கொரியாவில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,320 ஆக அதிகரிப்பு

தென்கொரியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,320 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியாவின் சுகாதார மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் , “ தென்கொரியாவில் கோவிட் காய்ச்சலுக்கு இதுவரை 8,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்”என்று தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு 183,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7,178 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x