Published : 14 Mar 2020 06:36 PM
Last Updated : 14 Mar 2020 06:36 PM

மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது: பாகிஸ்தான்

மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து வருபவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் மத்தியக் கிழக்கு நாடுகளான இராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களால் கரோனா வைரஸ் பரவுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் சையத் முரத் அலி ஷா கூறும்போது, “மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து வருபவர்கள் மூலமாக கரோனா வைரஸ் பரவுகிறது. சிந்து மாகாணத்தில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 8 பேர் சிரியா உள்ளிட்ட மத்தியக் கிழக்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான உயிரிழப்பை இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் சந்தித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x