Published : 14 Mar 2020 04:50 PM
Last Updated : 14 Mar 2020 04:50 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு 611 பேர் பலி

ஈரானில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 97 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 12,729 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்1,000க்கும் அதிகமானவர்கள் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

தற்போது கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x