Published : 14 Mar 2020 09:06 AM
Last Updated : 14 Mar 2020 09:06 AM

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலி: தன்னையே தனிமைப்படுத்திய ருமேனிய பிரதமர் லுடோவிக்

ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஓர்பான் கலந்துகொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த எம்.பி. தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என்பதால் தன்னைத்தானே தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறார் ஓர்பான்.

இதுகுறித்து பிரதமர் ஓர்பான் கூறும்போது, “நான் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது எம்.பி. ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் என்னை நானே சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொண்டுள்ளேன். இருந்தபோதும் பிரதமர் பணியை எனது அறையிலிருந்தே நான் தொடர்கிறேன்” என்றார். இத்தகவலை அரசு செய்தித்தொடர்பாளர் லோனெல் டாங்கா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x