Published : 13 Mar 2020 05:44 PM
Last Updated : 13 Mar 2020 05:44 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 512 ஆக அதிகரிப்பு

ஈரானில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 81 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 11,364 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட் -19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு
சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும், ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

தற்போது கோவிட் -19 காய்ச்சல் 111 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x