Published : 11 Mar 2020 12:34 PM
Last Updated : 11 Mar 2020 12:34 PM

யுகேவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா வைரஸ்

யுகேவில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுகேவின் சுகாதாரத்துறை அமைச்சரான நாடின் டோரிஸ்க்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் போதுமான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாடின் டோரிஸ் கடந்த வாரம்தான் யுகேவில் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மகளிர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். மேலும், யுகேவில் எம்.பி. ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

மேலும், யுகேவில் இதுவரை கோவிட் - 19 காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 382 பேர் கோவிட் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுகேவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிகமாக தென் கொரியா பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தென் கரோனா வைரஸுக்கு இதுவரை 7,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x