Published : 09 Mar 2020 06:28 PM
Last Updated : 09 Mar 2020 06:28 PM

ஈரானில் 24 மணிநேரத்தில் கரோனா வைரஸுக்கு 43 பேர் பலி

கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் அரசு திங்கட்கிழமை கூறும்போது, “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கோவிட்-19 காய்ச்சல் காரணமாக 43 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக ஈரானில் கோவிட் - 19 காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 595 பேர் கோவிட்-19 காய்ச்சலால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 7,167 பேர் கோவிட் - 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான காய்ச்சலால் தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x