Published : 06 Mar 2020 10:22 AM
Last Updated : 06 Mar 2020 10:22 AM

தென் கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: 6,248 ஆக அதிகரிப்பு

தென் கொரியாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6, 284 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியப் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “தென்கொரியாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இதுவரை 6, 284 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் 19 காய்ச்சல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 35 க்கும் மேலாக அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் டேகு நகரில் மட்டும் 518 பேர் கோவிட் 19 காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சியோலில் இந்த எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இத்தாலியில் கோவிட் - 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 77 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x