Published : 03 Mar 2020 05:47 PM
Last Updated : 03 Mar 2020 05:47 PM
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர்வரை கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இறங்கியுள்ளது.
செவ்வாய்கிழமையன்று கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு 125 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரியிலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக பதிவானது இன்றுதான் என்று சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,110 பேர் பலியாகி உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் (கரோனா வைரஸ் ) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT