Published : 23 Aug 2015 12:21 PM
Last Updated : 23 Aug 2015 12:21 PM

உலக மசாலா: தண்ணீருக்கே தண்ணி காட்டிய பாட்டில்!

பிரிட்டனின் கடல்வாழ் உயிரியல் கூட்டமைப்பை சேர்ந்த விஞ்ஞானி ஜார்ஜ் பிட்டர் என்பவர் கடலின் நீரோட்டத்தை அறிந்து கொள்வதற்காக 1904 முதல் 1906 வரை சுமார் ஆயிரம் பாட்டில்களை வடக்கு கடல் பகுதியில் வீசினார். அந்த பாட்டில்களில் ஒரு துண்டு பிரதியை எழுதிவைத்தார். அதில், பாட்டிலை ஒப்படைத்தால் பணப்பரிசு வழங்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. சில மாதங்களில் பெரும்பான்மையான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாட்டில்களில் ஒன்றை ஜெர்மனியின் அம்ரூம் தீவுப் பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் அண்மையில் கண்டுபிடித்தார். சுமார் 108 ஆண்டுகள் கடலில் மிதந்த அந்த பாட்டில் இப்போதுதான் கரை ஒதுங்கியுள்ளது. இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.

தண்ணீருக்கே தண்ணி காட்டிய பாட்டில்!

சீனாவின் கான்சு மாகாணம் லிசிபா கிராமத்தை சேர்ந்தவர் ஞான் குவான்சி (68). சம்பவத்தன்று ஒரு பெரிய பாண்டா கரடி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. சீனாவில் பாண்டா கரடி பாதுகாக்கப்பட்ட விலங்கு என்பதால் அதனை தாக்கினோலோ அல்லது கொன்றாலோ கடும் தண்டனை விதிக்கப்படும். எனவே அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்ட குவான்சி முயற்சித்தார். இதனால் கோபமடைந்த பாண்டா, அவரை அடித்து உதைத்தது. எனினும் விடாமல் போராடி அதனை மீண்டும் காட்டுக்குள் அனுப்பினார் குவான்சி. பாண்டா தாக்கியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அந்த மாகாண வனத்துறை, தேசிய இயற்கை பாதுகாப்பு ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால்தான் பாண்டா கரடி கிராமத்துக்குள் புகுந்து குவான்சியை தாக்கியது என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வனத்துறை மற்றும் தேசிய இயற்கை பாதுகாப்பு ஆணையம் சேர்ந்து குவான்சிக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

பாண்டா அடித்ததில் அதிருஷ்டம் அடித்திருக்கிறது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x