Published : 03 Mar 2020 10:48 AM
Last Updated : 03 Mar 2020 10:48 AM

கரோனா வைரஸுக்கு இத்தாலியில் 34 பேர் பலி

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை34 பேர் பலியானதாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1694 பேருக்கு கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ”கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர் சுமார் 1694 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கண்டத்துக்கு வெளியே கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பை சந்தித்திருக்கும் நாடு இத்தாலி ஆகும்” என்று தெரிவித்துள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

தென் கொரியாவில் இதுவரை 22 பேர் பலியாக புதிதாக 500 பேருக்கு கரோனா தொற்று பீடித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000 கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x