Published : 29 Feb 2020 09:55 AM
Last Updated : 29 Feb 2020 09:55 AM

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரிப்பு

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமையன்று சீனாவின் சுகாதார மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

"சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 31 மாகாணங்களில் இதுவரை 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,000-க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 39 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து திரும்பியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்து கோவிட் -19 காய்ச்சலுக்கு அதிகம் பாதிப்பை மத்திய கிழக்கு நாடான ஈரான் அடைந்துள்ளது. ஈரானில் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காய்ச்சல் பாதிப்பு இதுவரை 388 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் 2,000-க்கும் அதிகமான நபர்களுக்கு கோவிட் -19 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x