Published : 27 Feb 2020 06:07 PM
Last Updated : 27 Feb 2020 06:07 PM

கரோனா வைரஸ் எதிரொலி: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுப்பு; ஈரானுக்கான விமானங்கள் ரத்து

பாகிஸ்தானில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பரவலைத் தடுப்பதற்காக பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) பாதிப்பின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

சுமார் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 141 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளதால் இராக், ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் முன்னரே அந்நாட்டுக்கு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானும் ஈரானுக்கான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை வியாழன் மாலை முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “பாகிஸ்தானில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு கண்டறியப்பட்ட கராச்சி நகரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x