Published : 26 Feb 2020 04:51 PM
Last Updated : 26 Feb 2020 04:51 PM

அகதிகள் தடுப்புக் காவல் முகாம்: மனிதர்களைச் சிறைப்படுத்தும் முகாம்களை அனுமதிக்க மாட்டோம்- கிரீசில் வெடிக்கும் போராட்டம்

கிரீசில் அகதிகள்.

துருக்கியில் இருந்து ஐரோப்பாவுக்கு கிரீஸ் வழியே புலம்பெயருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அதிகரித்துள்ளது. இதன்பொருட்டு லெஸ்போஸ் , சியோஸ், சமோஸ், , கோஸ், மற்றும் லெரோஸ் தீவுகளில் புலம்பெயர்ந்தோருக்கு தடுப்புக் காவல் முகாம்கள் கட்ட கிரீஸ் அரசு திட்டமிட்டது..

இதனையடுத்து மனிதர்களை சிறைப்படுத்துவதையும் தீவையே சிறையாக மாற்றுவதையும் அனுமதிக்க மாட்டோம் என்று லெஸ்போஸ் துறைமுகத்தில் கட்டுமானப் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ்(Lesbos) தீவில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பல கட்டிடங்கள் தீக்கிரையாகின.

வடக்கு ஏஜியன் தீவுகளில் புலம்பெயர்ந்தோருக்கான தடுப்புக் காவல் முகாம் அமைக்க அரசு திட்டமிட்டு செயல்படவும் தொடங்கியது, இதனையடுத்து கிரீசில் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர், இதனையடுத்து கண்ணீர்ப்புகை வீசப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது. கண்ணீர்ப்ப்புகை வீச்சுக்குப் பாதிக்கப்பட்ட மத போதகர் ஒருவரும் உள்ளூர் மேயரும் மயக்கமடைய மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டனர்.

மனிதர்களை இவ்வாறு சிறைப்படுத்தக் கூடாது என்று மக்களே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அங்குள்ள யூனியன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, “யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது, யாரும் பள்ளிக்குச் செல்லக் கூடாது. கடைகள் திறக்கப்படக் கூடாது. நம் தீவையும் பிற ஏஜியன் தீவுகளையும் சிறைச்சாலைகளாக மாற்றி மனித ஆத்மாக்களை அங்கு கொண்டு அடைப்பதை அனுமதிக்கக் கூடாது” என்று அரசுக்கு எதிராக கடும் வார்த்தைகளில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இடது சாரிகளும் புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்ததால் கிரீஸ் திக்குமுக்காடி வருகிறது. ஒரு ராணுவச் சர்வாதிகாரி கூட இவ்வாறு செய்ய மாட்டார் என்று இடது சாரிகள் கடுமையாக அரசைச் சாடினர்.

சுமார் 43,000த்திற்கும் மேலான அகதிகள் தற்போது லெஸ்போஸ், கியாஸ், சேமோஸ், லெரோஸ் ஆகிய இடங்களில் தேங்கியுள்ளனர். துருக்கியைக் கடந்து இவர்கள் கிரீஸுக்கு வந்து ஐரோப்பாவுக்குள் நுழைய வரும் அகதிகள் ஆவார்கள். இதில் 99% பேர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாக கிரீஸ் குடியேற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x