Published : 26 Feb 2020 03:20 PM
Last Updated : 26 Feb 2020 03:20 PM

தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு புதிதாக 115 பேர் பாதிப்பு

தென்கொரியாவில் புதிதாக 115 பேருக்கு கோவிட் -19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்கொரியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,261 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரியாவின் நோய் தடுப்பு மையம் தரப்பில், “தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டேகு நகரில் புதிதாக 115 பேருக்கு (கரோனா வைரஸ்) பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. தென்கொரியாவில் இப்பகுதியில்தான் கோவிட்- 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 22 பேர் கோவிட்-19 ( கரோனா வைரஸ் ) காய்ச்சலில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளதாகவும், தென்கொரியாவில் 22,550 பேருக்கு வைரஸ் பாதிப்பில்லை என்றும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,600க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x