Published : 26 Feb 2020 10:47 AM
Last Updated : 26 Feb 2020 10:47 AM

கரோனா வைரஸ் பாதிப்பு: ஈஸ்டர் தாண்டியும் ஹாங்காங்கில் பள்ளிகளுக்கு விடுப்பு

கரோனா வைரஸ் காரணமாக ஹாங்காங்கில் பள்ளிகள் ஈஸ்டர் தாண்டியும் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் பள்ளி நிர்வாக அதிகாரிகள் தரப்பில், “கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஹாங்காங்கில் வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிவரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் மற்றும் வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்று கணித்துள்ளனர். எனவே வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவது என்பது பாதுகாப்பான முடிவு” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹாங்காங்கில் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை வரை 85 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,600க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x