Published : 22 Feb 2020 09:54 AM
Last Updated : 22 Feb 2020 09:54 AM

கரோனா வைரஸுக்கு இத்தாலியில் ஒருவர் பலி

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். கரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும்.

இதுகுறித்து இத்தாலில் உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் , “ இத்தாலியில் உள்ள பாடுவே நகரில் கோவிட் 19 (கரோனா) வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்தார். கரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் கோவிட் 19 ( கரோனா ) வைரஸ் பாதிப்பு காரணமாக 17 பேர் பாதிகப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x