Published : 20 Feb 2020 05:24 PM
Last Updated : 20 Feb 2020 05:24 PM

ஈரானில் கரோனா வைரஸுக்கு இருவர் பலி

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஈரானின் ஹோம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரு முதியவர்கள் மரணமடைந்தனர். இவர்களுக்கு எப்படி கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

தவறவீடாதீர்!

கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 2,118 ஆக அதிகரிப்பு

கச்சத்தீவில் மார்ச் 6,7-ல் புனித அந்தோணியார் திருவிழா: இந்தியாவிலிருந்து 3,004 பக்தர்கள் பெயர் பதிவு

அயோத்தியில் புத்தக் கோயிலுக்கும் இடம் கொடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x