Published : 20 Feb 2020 03:57 PM
Last Updated : 20 Feb 2020 03:57 PM
சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,118 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, ”கரோனா வைரஸ் பாதிப்புக்கு புதன்கிழமை 114 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட் - 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,118 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 74,576 பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹாங்காங்கில் கரோனா வைரஸால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெலியாகியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தவறவீடாதீர்
371-வது பிரிவு எந்த காலத்திலும் நீக்கப்படாது: அமித் ஷா உறுதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT