Published : 20 Feb 2020 10:10 AM
Last Updated : 20 Feb 2020 10:10 AM

கரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இரு பயணிகள் உயிரிழப்பு

ஜப்பான் கப்பலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இரு பயணிகள் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்த வாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் வந்தது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.

இந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 காய்ச்சல் இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்- 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டைமண்ட் கப்பலில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த இருவரும் 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவீடாதீர்கள்

கோவிட் 19 வைரஸ் தாக்கம் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்- ஆர்பிஐ கவர்னர் தகவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு- படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி


வார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x