Published : 19 Feb 2020 05:51 PM
Last Updated : 19 Feb 2020 05:51 PM

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கிய அலெப்போ விமான நிலையம் 

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அலெப்போவில் விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

மேலும் அலெப்போவின் முக்கிய பகுதிகளும் சிரிய அரசுப் படை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் காரணமாக அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ அலெப்போவின் வடமேற்குப் பகுதியை ரஷ்யாவின்ஆதரவுடன் சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. இதன் காரணமாக 8 வருடங்களுக்கு பிறகு அங்குள்ள விமான நிலையம் புதன்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வர்த்தக விமானங்கள் மூலம் அலெப்போ நகரின் பொருளாதாரம் உயரும்” என்று தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துறை அமைச்சர் அலி ஹமவுத் கூறும்போது, “சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அடுத்த மாதம் கெய்ரோவுக்கான பாதையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x