Published : 19 Feb 2020 10:20 AM
Last Updated : 19 Feb 2020 10:20 AM
சீனாவைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2004 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூறும்போது , “சீனாவில் செவ்வாய்க்கிழமையன்று கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 136 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2004 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தவறவீடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT