Published : 13 Feb 2020 02:48 PM
Last Updated : 13 Feb 2020 02:48 PM

ஜப்பான் கப்பலில் இரு இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இரு இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோககாமா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்தடைந்தது. இதில் 3,000க்கும் அதிகமான பயணிகள் உள்ளனர்.

அண்மையில் சீனா சென்று திரும்பிய இந்தக் கப்பலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் யோககாமா துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அதன்படி முதலில் 60 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தொடர் பரிசோதனைகளில் 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளது.

மேலும், கப்பலில் உள்ள இரு இந்தியப் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ரவிசங்கர் கூறும்போது, ''இரு இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடுவோம். நமது தூதரகம் அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x