Published : 12 Feb 2020 02:59 PM
Last Updated : 12 Feb 2020 02:59 PM

கரோனா வைரஸுக்கு புதுப் பெயர்

சீனா உட்பட உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தும் கரோனா வைரஸுக்கு கோவிட் - 19 என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இதுகுறித்து ஜெனிவாவில் பத்திரிகையாளர்களிடம் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோ கூறும்போது, “இப்போது அந்நோய்க்கு நம்மிடம் பெயர் உள்ளது. கோவிட் - 19. இந்த நோயுடன் உலக நாடுகள் முடிந்தவரை ஆக்ரோஷமாகப் போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் என்பது பல வைரஸ்கள் சேர்ந்த குழுவைப் பயன்படுத்துவதற்கு அழைக்கப்படுவது. இதன் காரணமாக சீனாவில் எற்பட்ட நோயை எப்படி அழைப்பது என்று ஆராய்ச்சியாளர்களிடம் குழுப்பம் நீடித்து வந்தது. எனவே, அக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஆராய்ச்சியாளர்களால் இப்பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 44,653 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,000க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x