Published : 07 Feb 2020 05:30 PM
Last Updated : 07 Feb 2020 05:30 PM

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 4 பேர் பலி 

கடந்த 24 மணிநேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் ஆக்கிரமிப்பு என்று கூறி, இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனர்களின் இல்லங்களில் இடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் 4 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.

மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டங்களில் காசா பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x